Posts

Showing posts from May, 2022

#BREAKING || குரங்கு அம்மை - தமிழக விமான நிலையங்களுக்கு அதிரடி உத்தரவு2052607299

Image
#BREAKING || குரங்கு அம்மை - தமிழக விமான நிலையங்களுக்கு அதிரடி உத்தரவு

Eeramana Rojave 2 Serial Today Episode Preview Promo | 30.05.2022 Vijaytv Serial Review By Idamporul2079072556

Image
Eeramana Rojave 2 Serial Today Episode Preview Promo | 30.05.2022 Vijaytv Serial Review By Idamporul

ரேஷன் கடைகளில் முக்கிய அறிவிப்பு! தமிழக அரசு அதிரடி! மக்கள் மகிழ்ச்சி!2109113044

Image
ரேஷன் கடைகளில் முக்கிய அறிவிப்பு! தமிழக அரசு அதிரடி! மக்கள் மகிழ்ச்சி!   சென்னை: தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி உறுதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன..   இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பல பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்பட்டு வருகின்றன..   ஆய்வுகள் மேலும், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக, ரேஷன் கடைகள் குறித்த புது புது அறிவிப்புகள் அடிக்கடி வெளியாகி கொண்டே இருக்கிறது.. அந்த அறிவிப்புகள் சட்டசபைகளிலும், சில நேரம் அமைச்சர்களின் பேட்டிகளின் மூலம் வெளியாகிறது.. அந்த வகையில், நியாய விலைக் கடைகளில் கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத்

பெண்களுக்கு கட்டாய நைட் ஷிப்ட் கூடாது! முதல்வர் அதிரடி உத்தரவு!520076858

Image
பெண்களுக்கு கட்டாய நைட் ஷிப்ட் கூடாது! முதல்வர் அதிரடி உத்தரவு! உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலானபாஜகஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக புதிய உத்தரவை யோகி அரசு பிறப்பித்துள்ளது. உத்தரப் பிரதேச  தொழிலாளர் துறை வெளியிட்ட உத்தரவில், பெண் தொழிலாளர்கள் மாலை 7 மணிக்கு மேல் அதிகாலை 6 மணிக்குள் கட்டாயமாக வேலை செய்ய வைப்பதற்கு அனுமதி கிடையாது. . விருப்பத்தின் பேரில் வேலை செய்யலாமே தவிர அவர்களை பணிசெய்யும் நிறுவனம் கட்டாயப்படுத்த முடியாது. அதேபோல், இந்த உத்தரவை காரணம் காட்டி இரவு பணி வைத்திருக்கும் பெண் தொழிலாளர்களை நிறுவனங்கள் வேலை நீக்கம் செய்யக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.  விருப்பத்தின் பேரில் இரவு நேரத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு இலவச போக்குவரத்து, உணவு மற்றும் போதிய பாதுகாப்பு ஆகியவை வழங்கப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து மில் மற்றும் தொழிற்சாலைகளில் பெண்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவிப்பில்

மாதவிடாய் சுகாதார நாள் - MENSTRUAL HYGIENE DAY ||@Gem Television196195525

Image
மாதவிடாய் சுகாதார நாள் - MENSTRUAL HYGIENE DAY ||@Gem Television

போரிஸ் ஜான்சன்: வடகிழக்கு சுற்றுப்பயணத்தில் பிரதமர் ஸ்டாக்டனுக்குச் சென்றார்786773465

Image
போரிஸ் ஜான்சன்: வடகிழக்கு சுற்றுப்பயணத்தில் பிரதமர் ஸ்டாக்டனுக்குச் சென்றார்

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து - 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு212464279

Image
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து - 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு ,மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று செனகல். இந்த நாட்டில் மேற்கு பகுதியில் திவாவோன் நகர் உள்ளது . அங்குள்ள ஒரு மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக அந்த நாட்டின் அதிபர் மேக்கி சால் கூறும்போது "பொது மருத்துவமனையின் பிறந்த குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 புதிதாகப் பிறந்த குழந்தைகள் இறந்ததை நான் வேதனையுடன் அறிந்தேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

என்னை மட்டும் நீக்கவில்லை என்றால் டெஸ்ட்டில் 10,000 ரன்களுக்கும் மேல் குவித்திருப்பேன் -சேவாக் வேதனை

Image
என்னை மட்டும் நீக்கவில்லை என்றால் டெஸ்ட்டில் 10,000 ரன்களுக்கும் மேல் குவித்திருப்பேன் -சேவாக் வேதனை விரேந்திர சேவாக், இந்தியாவின் அதிரடி தொடக்க வீரர், டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படைகளையே மாற்றிப் போட்டவர், தலைகீழாக்கிய போஸ்ட் மாடர்ன் பேட்டர். ஆனால் இவரது கரியர் அப்படியே முடிந்தது, 8503 டெஸ்ட் ரன்களுடன் அவர் முடிந்தார், ஆனால் இந்தியாவின் 5-வது சிறந்த பேட்டர் என்று முடிக்கப்பட்டார். 11 மாதங்களுக்கு என்னை ட்ராப் செய்யாமல் இருந்திருந்தால் 10,000 ரன்களுக்கும் மேல் குவித்திருப்பேன் என்கிறார் சேவாக். 2001- சேவாகின் அறிமுக டெஸ்ட் இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளது,தென் ஆப்பிரிக்காவில் ப்ளூம்பவுண்ட்டைனில் இவரும் சச்சினும் தென் ஆப்பிரிக்காவின் பலமான பந்து வீச்சை புரட்டி எடுத்தனர், சேவாக் 105 ரன்கள் எடுத்தார். ஆனால் சேவாக் போன்ற வீரர்களையெல்லாம் பார்மை வைத்து எடைப்போடக்கூடாது, ரவிசாஸ்திரி ஒருமுறை சொன்னது போல் 10 போட்டிகளில் 3 போட்டிகளில் சேவாக் ரன்கள் எடுத்தால் கூட போதும் என்று அணியில் வைத்திருப்பதுதான் எதிரணியின் திட்டங்களையே மாற்றுவதைச் செய்ய முடியும் என்றார். இந்நிலையில் ஸ்போர்ட்ஸ் 18 சேனலுக்க

விக்ரம் படத்திலிருந்து ‘போர்க்கண்ட சிங்கம்’ லிரிக்கல் வீடியோ நாளை ரிலீஸ்…

Image
விக்ரம் படத்திலிருந்து ‘போர்க்கண்ட சிங்கம்’ லிரிக்கல் வீடியோ நாளை ரிலீஸ்… கமலின் விக்ரம் படத்திலிருந்து அடுத்த லிரிக்கல் வீடியோவாக போர்க்கண்ட சிங்கம் பாடல் வெளியாகவுள்ளது. கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையொட்டி கடந்த 15-ம்தேதி படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியிடப்பட்டது. ஏற்கனவே கமல் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் 1986ல் வெளிவந்து சாதனை படைத்தது. அதே டைட்டில் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. விக்ரம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் சூர்யா இடம்பெற்றுள்ளார். மல்டி ஹீரோக்கள் இடம்பெற்றுள்ளதாலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக ஹிட் படங்களைக் கொடுத்ததாலும் விக்ரம் படத்தின் மீது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். இதையும் படிங்க - விஜய் தேவரகொண்டா சமந்தாவுக்கு காயமில்லை... விபத்து செய்தியை மறுத்த குஷி படக்குழு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் தளமான புக் மை ஷோ Book My Show இணையதளத்தில் விக்ரம் படத்தை பார்ப்ப

தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள்

Image
தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக தனுஷின் ரசிகர்கள் ட்ரெய்லரால் உற்சாகம் அடைந்துள்ளனர். கர்ணன் படத்திற்கு பின்னர் வெளிவந்த தனுஷின் மாறன், ஜெகமே தந்திரம், அந்த்ராங்கி ரே ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தனுஷின் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படம் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் தனுஷின் ரசிகர்கள் உள்ளார்கள். நேற்று வெளியான தனுஷின் கேரக்டர் போஸ்டர் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டுள்ளது. அதில் தனுஷுக்கு Lethal Force என்ற அடைமொழி கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் தனுஷுக்கு படத்தில் முக்கிய காட்சிகள் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று தி கிரே மேன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை தனுஷின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ட்ரெய்லரின் 1:22 வது நிமிடத்தில் தனுஷின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தி கிரே மேன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியா

கார்த்தியின் சர்தார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… போலீஸ் கேரக்டர் போஸ்டர் வெளியீடு

Image
கார்த்தியின் சர்தார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… போலீஸ் கேரக்டர் போஸ்டர் வெளியீடு கார்த்தியின் நடிப்பில் உருவாகி வரும் சர்தார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அவருக்கு பிறந்தநாள் வரும் நிலையில் அதற்கு வாழ்த்துச் சொல்லும் விதமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் கார்த்தி, தயாரிப்பாளர்களின் விருப்ப நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் தொடர்ச்சியாக ரிலீசிற்கு காத்திருக்கின்றன. அவற்றில் சர்தார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. இந்தப் படத்தில் திறமையான உளவுத்துறை ஏஜென்ட் மற்றும் போலீஸ் என 2 கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளார். இதையும் படிங்க - தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் தனுஷின் கேரக்டர் போஸ்டர் வெளியீடு… இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கன்னா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் ஹீரோ பட சறுக்கலுக்கு பிறகு இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்குனம் படம் என்பதால் சர்தார்

கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கிறாரா கமல்?

Image
கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கிறாரா கமல்? கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கமல்ஹாசன் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேஜிஎஃப் 2 படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள டாப் ஹீரோக்கள் பார்வை இயக்குனர் பிரசாந்த் நீல் மீது திரும்பியுள்ளது. தங்கல், பாகுபலி 2 படங்களைத் தொடர்ந்து இந்தியாவில் உருவான படங்களில் அதிகம் வசூலித்த படம் என்ற பெருமையை கேஜிஎஃப் 2 திரைப்படம் பெற்றுள்ளது. இதன் அடுத்த பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இயக்குனர் பிரசாந்த் நீல் 2 படங்களில் பிஸியாக உள்ளார். முதலாவதாக ஏற்கனவே படப்பிடிப்பில் இருந்த பிரபாஸின் சலார் படத்தின் ஷூட்டிங்கை விறுவிறுவென நடத்தி வருகிறார் பிரசாந்த் நீல். வயிற்றில் ரத்த கசிவு, அப்பாவை வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம் - சிம்பு அறிக்கை இந்த படத்தை முடித்துக் கொண்டு அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர்.நடிக்கும் படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார். இது ஜூனியர் என்டிஆரின் 31-வது படமாகும். இதற்கு முன்பாக தனது 30-வது படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குனர் கொரட்

கோபியை துரத்தியடிக்கும் ராதிகா... மூர்த்தி போட்ட பிட்டு நல்லா வேலை செய்யுதே

Image
கோபியை துரத்தியடிக்கும் ராதிகா... மூர்த்தி போட்ட பிட்டு நல்லா வேலை செய்யுதே கடந்த சில நாட்களாக மெகா சங்கமம் என்ற பெயரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பத்தினர், பாக்யலட்சுமியின் மாமனார் ராமமூர்த்தியின் 70வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்னை வருவதாக காட்டப்பட்டது. இதில் கோபியின் நடவடிக்கை மேல் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு சந்தேகம் வருகிறது. கடைசியாக கோபிக்கும், ராதிகாவிற்கும் இடையேயான உறவையும் மூர்த்தி கண்டுபிடித்து விடுகிறார். ராதிகா வீட்டிற்கே நேரில் சென்று, விசாரித்து கோபி பற்றிய உண்மையை தெரிந்து கொள்கிறார்கள். கோபி நல்லவர் இல்லை. அவர் உங்களையும் அவரது குடும்பத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என ராதிகாவிடம் சொல்லி விட்டு செல்கின்றனர். பாக்யாவிடம் தனம் சொன்ன விஷயங்களால் அவருக்கும் சந்தேகம் ஏற்படுகிறது. இதற்கிடையில் உண்மை தெரிந்த மூர்த்தி, கோபியிடம் சண்டை போட, இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் மூர்த்தியை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி விடுகிறார் கோபி. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கிளம்பிச் சென்றதும், மெகா சங்கமம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் வரும்

மனைவிக்கு டார்ச்சர் கொடுத்த வாலிபரை வெட்டிய கணவன்.. தடுக்க வந்த தந்தைக்கு கை துண்டானது

Image
மனைவிக்கு டார்ச்சர் கொடுத்த வாலிபரை வெட்டிய கணவன்.. தடுக்க வந்த தந்தைக்கு கை துண்டானது தஞ்சாவூரில் மனைவியை கிண்டல் செய்த வாலிபரின் தலையில் அரிவாளால் கணவன் வெட்டியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். சம்பவத்தை தடுக்க வந்த வாலிபரின்  தந்தையின் கை துண்டானது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் நாச்சியார்கோவில் காவல் சரகம் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (22). வெல்டிங் பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.  இவரது மனைவியை அதே பகுதியை சேர்ந்த அஜித் (22) என்பவர் தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விஜயிடம் அவரது மனைவி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விஜய் பலமுறை அஜீத்தை கண்டித்ததாக கூறப்படுகிறது.  ஆனால் அஜித் கிண்டல் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக விஜய்தனது  நண்பர் திவாகருடன் சேர்ந்து அஜித்திடம் கேட்டுள்ளனர். அப்போது இருவருக்கும்  தகராறு முற்றி கைகலப்பாகி உள்ளது. அப்போது திவாகர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், அஜித்தின் நடுதலையில் வெட்டியுள்ளான், இதில் அஜித் பலத்த காயம் அடைந்துள

கல்ச்சுரல் கைடுலைன் பிடிக்கவில்லை என்றால் நிறுவனத்தை விட்டு வெளியேறலாம் - Netflix நிறுவனம் அதிரடி!

Image
கல்ச்சுரல் கைடுலைன் பிடிக்கவில்லை என்றால் நிறுவனத்தை விட்டு வெளியேறலாம் - Netflix நிறுவனம் அதிரடி! உலகின் முன்னணி OTT தளமான நெட்ஃபிலிக்ஸ் அதிரடியாக ஒரு அறிவிப்பை மேற்கொண்டுள்ளது. ஆனால், இது நெட்ஃபிலிக்ஸ் சந்தாதாரர்களுக்கு இல்லை. புதிய சந்தா திட்டங்கள், விளம்பரங்கள் ஒளிபரபப்பு, லட்சக்கணக்கான சந்தாதாரர்கள் குறைவு என்று கடந்த சில வாரங்களாக நெட்ஃபிலிக்ஸ் பல காரணங்களுக்காக தலைப்புச் செய்தியில் இடம்பெற்றது. ஆனால், தற்போது புதிய, யாரும் எதிர்பாராத ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு நெட்ஃபிலிக்சின் ஊழியர்களுக்கானது. கல்ச்சுரல் கைடுலனை புதுப்பித்த நெட்ஃபிலிக்ஸ், அதில் புதிதாக ‘ஆர்டிஸ்டிக் எக்ஸ்ப்ரஷன்’ எனப்படும் ஒரு பிரிவை சேர்த்துள்ளது. இந்த பிரிவில் பல்வேறு பார்வையாளர்களுக்கு எவ்வாறு புரோம்கிராம்களை வழங்குகிறது என்பது பற்றிய விவரங்களை வழங்குகிறது. உலகின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான நெட்ஃப்ளிக்ஸ் சமீபத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்க்ரைபர்களை இழந்துள்ளது என்ற தகவல் வெளியாகியது. அதை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை குறையாத நெட்ஃபிளிக்ஸ் பங்குகள் மதிப்பு தடாலென்று சரி

குரூப் - 2 தேர்வுக்கான விடை விரைவில் வெளியீடு : டிஎன்பிஎஸ்சி தகவல்

Image
குரூப் - 2 தேர்வுக்கான விடை விரைவில் வெளியீடு : டிஎன்பிஎஸ்சி தகவல் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் - 2 தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வுக்கு 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 9.94 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1.83 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை 9.30 தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வர்கள் 9 மணிக்குள் தேர்வு அறைக்கு வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. பல்வேறு இடங்களில் தாமதமாக வந்த தேர்வர்கள் திருப்பி அனுப்பப் பட்டனர். இந்த தேர்வில் தவறான கேள்விகள் இடம் பெற்றிருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் இதனை டிஎன்பிஎஸ்சி மறுத்துள்ளது.  மேலும் படிக்க | நாளை நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வு குறித்த முழு விவரம்! குரூப் 2, 2ஏ தேர்வில் தவறான கேள்விகள் ஏதும் இடம்பெறவில்லை எனவும், மொழிபெயர்ப்பு மற்றும் விடைக்கான ஆப்ஷன்களிலும் எந்த தவறும் இல்லை எனவும் டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. மேலும், தற்காலிக விடைக்குறிப்பு 5 நாட்களுக்குள் வெளியிடப்படும் எனவும், அதில் ஏதும் ஆட்சேபணைகள் இருந்தால் தேர்வர்கள் கருத்து தெரிவிக்க

Wet Rose ௨ Serial Shocking Twist Preview Promo | -893861445

Image
Eeramana Rojave 2 Serial Shocking Twist Preview Promo | May 23rd - 27th May 2022 | Vijaytv Serial

Ration Card: உங்க ரேஷன் கார்டு இனி செல்லாது - 2 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து!

Image
Ration Card: உங்க ரேஷன் கார்டு இனி செல்லாது - 2 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து! தமிழகத்தில், சுமார் 2 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டு உள்ளதாக, தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்து உள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்திற்கு பிறகு, அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 11 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 33 ஆயிரத்து 888 பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. அதே போல் மாவட்டத்தில் 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள 131 கடைகளை வரும் ஜூலை மாதத்திற்குள் பகுதி நேர கடைகளாகவும், முழு நேர கடைகளாகவும் பிரிக

MBBS -1839123279

Image
எம்.பி.பி.எஸ். படித்த பெண் டாக்டர் தற்கொலை! அதிர்ச்சியில் மேட்டுப்பாளையம் மக்கள்...! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காட்டூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது மனைவி டாக்டர் செந்தாமரை. இவர் மேட்டுப்பாளையம் கெண்டையூரில் தனியார் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவர்களது மகள் ராசி (வயது 27). எம்.பி.பி.எஸ். படித்து உள்ளார். இவருக்கும், மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்த அபிஷேக் (30) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அபிஷேக் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இதற்கிடையே ராசி முதுகலை (எம்.எஸ்., எம்.டி) பட்டம் பெற நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார். அவர் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து படித்து வந்தார். டாக்டர் ராசி வீட்டின் 3-வது மாடி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு எழுதுவது குறித்து ராசி அச்சத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் தற்கொலை செய்த பெண் டாக்டரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ

Horoscopes for today 20.05.2022-23077340

Image
இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் 20.05.2022

மகரம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் magaram guru peyarchi 2022 in tamil palangal Tamil god-943462376

Image
மகரம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் magaram guru peyarchi 2022 in tamil palangal Tamil god

Raja Rani Today Episode May TV TV Promo

Image
Raja Rani 2 Today Episode 19th May 2022 Vijay TV Promo

Low supply of vegetables due to rains!

Image
மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைவு! தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் விலை இரு மடங்கு அதிகரிப்பு..! சென்னை: தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருவதால் காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் அதன் விலைகள் இருமடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு எப்போதும் 500 வாகனங்களில் இருந்து 5000 டன் காய்கறிகள் வருவது வழக்கம். ஆனால், நேற்று காலை 400 வாகனங்களில் இருந்து 4,500 டன்னுக்கும்  குறைவான காய்கறிகளே  வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம்  ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.60க்கும், பெங்களூர் தக்காளி ரூ.70க்கும், பீன்ஸ் ரூ.100க்கும், அவரைக்காய் ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று காலை, ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.60 இருந்து 80க்கும், பெங்களூர் தக்காளி ரூ.70 இருந்து  ரூ.85க்கும், பீன்ஸ் 100க்கும், அவரைக்காய் ரூ. 50 இருந்து ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், சென்னை புறநகரில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ நாட்டுத்தக்காளி ரூ.90க்கும், பெங்களூர் தக்காளி ரூ.100க்கும், பீன்ஸ் ரூ

மலையாள வலைப்பதிவாளர் ரிஃபா மெஹ்னு தற்கொலை செய்துகொண்டதாக பிரேத பரிசோதனை...

Image
மலையாள வலைப்பதிவாளர் ரிஃபா மெஹ்னு தற்கொலை செய்துகொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது மலையாளி வோல்கர் ரிஃபா மெஹ்னுவின் மரணத்தில் அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியதைத் தொடர்ந்து அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை, அவரது மரணம் தற்கொலையால் ஏற்பட்டதாகக் கூறுகிறது. 20 வயதான வோல்கர் துபாயில் உள்ள அவரது வீட்டில் அவரது கணவர் மெஹ்னு (மெஹ்னாஸ்) மார்ச் மாதம் இறந்து கிடந்தார். "மெஹ்னாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையை போலீசார் தொடருவார்கள்" என்று போலீசார் தெரிவித்தனர்.

விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவி-யின் ஹிட் சீரியல்?

Image
சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் விரைவில் முடிவுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளித்திரையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த நடிகை ராதிகா, தமிழ் திரையுலகின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 80 மற்றும் 90-களில் படு பிஸியாக வலம் அவர், திடீரென சினத்திரை பக்கம் தனது கவனத்தை திருப்பினார். அதில் பல வெற்றிகளையும் குவித்தார். அதில் ராதிகா நடித்த சித்தி சீரியல் மிக முக்கியமானது. சித்தி சீரியலுக்கு மக்களிடையே இன்னும் வரவேற்பு இருப்பதை தெரிந்து கொண்ட ராதிகா, சித்தி 2 சீரியலை தயாரித்தார். அந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. சில எபிசோட்கள் நடித்த அவர் பின்னர் அதிலிருந்து விலகினார். 1 வருடத்திற்கும் மேலாக சின்னத்திரையில் இருந்து ஒதுங்கியிருந்த... விரிவாக படிக்க >>

நாளை முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 புதிய அறிவிப்புகள் | Ration card latest news | Ration shop news

Image
நாளை முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 புதிய அறிவிப்புகள் | Ration card latest news | Ration shop news

தமிழக பேருந்தில் கட்டணம் 5 முதல் 51 வரை திடீர் உயர்வு பெண்கள் அதிர்ச்சி | #busnews | Today bus news

Image
தமிழக பேருந்தில் கட்டணம் 5 முதல் 51 வரை திடீர் உயர்வு பெண்கள் அதிர்ச்சி | #busnews | Today bus news

இல்லத்தரசிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!: சென்னையில் ரூ.38 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம் விலை.. சவரன் ரூ.37,896-க்கு விற்பனை..!!

Image
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.37,896-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  அண்மைக்காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் நேற்று நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் தங்கம் சவரனுக்கு ரூ.472 குறைந்து, ரூ.38,112-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலையானது அதிரடியான சரிவை கண்டிருக்கிறது. அதன்படி, சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.18 குறைந்து 4,737 ரூபாய்க்கு விற்பனை... விரிவாக படிக்க >>

125 ஆண்டுக்கு பிறகு நாளை பல மாவட்டம் ஆபத்து 115 கி.மீ வேகத்தில் புயல் | #tamilnews | Tn Rain news

Image
125 ஆண்டுக்கு பிறகு நாளை பல மாவட்டம் ஆபத்து 115 கி.மீ வேகத்தில் புயல் | #tamilnews | Tn Rain news

ரோஜா மோதி முள்ளுக்கு எலும்பு முறிவு..!

Image
ரோஜா மோதி முள்ளுக்கு எலும்பு முறிவு..!

Abhi Tailor | அபி டெய்லர் | Latest Update | Neelambari Tries To Motivate Abhi

Image
Abhi Tailor | அபி டெய்லர் | Latest Update | Neelambari Tries To Motivate Abhi

Thavamai Thavamirundhu (தவமாய் தவமிருந்து) - | Mon-Sat 7 PM | Zee Tamil | Promo

Image
Thavamai Thavamirundhu (தவமாய் தவமிருந்து) - | Mon-Sat 7 PM | Zee Tamil | Promo

Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - Mon-Sat 7:30 PM - Promo - Zee Tamil

Image
Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - Mon-Sat 7:30 PM - Promo - Zee Tamil

கொரோனாவில் இருந்து மீண்டோருக்கு தொடரும் அறிகுறிகள்: ஆய்வில் தகவல்

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாவிட்டால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது

Image
இதையும் படிங்க ஆசிரியர் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாவிடின், பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப முடியாது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். இரண்டு வாரங்களுக்குள்... விரிவாக படிக்க >>

விஷ்ணுவின் கருணையை அளிக்கும் ரமா ஏகாதசி

Image
ரமா ஏகாதசி விரத்தை மேற்கொண்டால், மகாவிஷ்ணுவின் கருணையைப் பெற முடியும். இந்த ஏகாதசியின் பெருமையைப் பற்றி, பாண்டவர்களில் முதன்மையானவரான தருமருக்கு, கிருஷ்ண பகவான் எடுத்துரைத்துள்ளார். ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள் வரும். இப்படி வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உண்டு. சில வருடத்தில் 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. கார்த்திகை மாத தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘ரமா’ ஏகாதசி என்பார்கள். இந்த ஏகாதசியின் பெருமையைப் பற்றி, பாண்டவர்களில் முதன்மையானவரான தருமருக்கு, கிருஷ்ண பகவான் எடுத்துரைத்துள்ளார். அவர் சொன்ன... விரிவாக படிக்க >>