Posts

Showing posts with the label #aadharcard #pancard

பான், ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – மார்ச் 31 கடைசி நாள்!

Image
பான், ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – மார்ச் 31 கடைசி நாள்! இந்தியாவில் தனிநபர் அடையாள அட்டைகளுள் ஒன்று ஆதார் கார்டு ஆகும். மேலும் வருமான வரித் தாக்கல் செய்யும் போது பான் கார்டு அவசியமானதாகும். தற்போது பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்போது பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம். பான் – ஆதார் இணைப்பு: இந்தியாவில் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இந்த ஆதார் கார்டை பயன்படுத்தி தான் அரசின் அனைத்து சேவைகளும் பெற முடிகிறது. தற்போது ஆதார் கார்டு மூலமாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. அத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்துவது, சிலிண்டர் பெறுவது, வருமான வரி தாக்கல் செய்வது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இதையடுத்து ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.   இதனை தொடர்ந்து தற்போது பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.