அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்: அரசாணை வெளியீடு!


அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்: அரசாணை வெளியீடு!


அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு , புதிய வெயிட்டேஜ்-க்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்த போது அரசு ஊழியர் ஒருவர் 54 வயது மற்றும் அதற்கு கீழ் வயதிற்குள்ளாக விருப்ப ஓய்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு கூடுதலாக ஐந்து ஆண்டு பணியாற்றியதாக வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் 54 க்கு பதிலாக 55 வயது மற்றும் அதற்கு கீழ் பணியாற்றி விருப்ப ஓய்வு கொடுத்தால் அதேபோல ஓய்வு பெறும் வயது ஐம்பத்தி ஆறு என்றால் அவருக்கு நான்காண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் அவர் பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.

இணையும் சசிகலா, ஓபிஎஸ்: என்ன செய்யப் போகிறார் எடப்பாடி?

அதேபோல ஐம்பத்தி ஏழு ஆண்டுகள் வயது ஆகி ஓய்வு பெற்றால் மூன்று ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடக்கப்படும்.

அதேபோல ஐம்பத்தி ஒன்பது வயதில் விருப்பு ஓய்வு கொடுத்தால் அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog