கொரோனா அடுத்த அலை வருமா இல்லையா - அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்


கொரோனா அடுத்த அலை வருமா இல்லையா - அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்


மூன்று அல்லது நான்கு மாதங்களில் அதாவது ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா நான்காவது அலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய கொரோனா நிபுணர் குழு தலைவர் இக்பால் தெரிவித்திருந்தார். இதற்கிடையே ஜூன் மாதம் இறுதியில் கொரோனா 4 வது அலை ஏற்படும் என்று கான்பூர் ஐஐடி தெரிவித்துள்ளது. கொரோனா அடுத்த அலை பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன், "கொரோனா அடுத்த அலை வருமா இல்லையா என்று யாரும் முன்கூட்டியே கணிக்க இயலாது. திருமணத்துக்கு நாள் குறிப்பது போல கான்பூர் ஐஐடி கொரோனா நான்காவது அலை இப்போ வரும், அப்போ வரும் என்று தொடர்ந்து கூறி வருகிறது" என்றார். 

Comments

Popular posts from this blog

Watson Lake at Prescott AZ Features Beautiful Hiking Trails